Friday, March 7, 2008

சிமிட்டாத கண்...

உனைக் கூண்டிலேற்றியே
நியாயத் தீர்ப்பெழுதுகிறேன்
நாள் தவறாது...

சாட்டையின் நாவுக்குன்
குருதி திகட்ட
தண்டிக்கிறேன்...

என் சொற்கள்
உன் செவியேறுமெனில்
மொழியறிவே
உன் பிறவிச்சாபம்...

உனையுணர்ந்த நாள்முதலாய்
உன்னோடு நான்புரியும்
சமரில் களைத்து
சாய்கிறேன் உன் மடிமீதே...

எனை நான் காணா
ஏகாந்த ஆழ்துயிலில்
உற்றுநோக்கி
உலுக்கி எழுப்புகிறதுன்
சிமிட்டாத ஒற்றைக் கண்...

இப்பின்னிரவில்
நியூட்டனையும்
சந்தேகிக்கிறேன்...

No comments: