Tuesday, January 29, 2008

கால் விலங்கு...

நான்...
யோக்யதை போதவில்லை
எழுத,

சமீபத்திய பாவம்
இவ்வெள்ளைத்தாளின்
நிர்வாணத்தை கறைபடுத்தியது
கவிதை எனக்கூறி....

இருப்பின் அவஸ்தை
வேறென்ன செய்ய?

இன்னும் கொஞ்சம்
மது அருந்தலாம்...

எதிர் வீட்டு கன்னியை
மீண்டும்
புணர்ச்சிக்கு அழைக்கலாம்...

புரியாத ஓர்
புத்தகத்தை பிரித்து படிக்கலாம்...

அற்பாயுளில் தொங்கிய
அண்டை வீட்டு
ஆவியுடன் பேசலாம்...

வேறென்ன செய்ய?

மது
மாது
மயக்கம்...

வேண்டுவன இவைதாம்...

அறிதல்... அர்த்தம்...
ஹம்பக்.....

ஓ.. சீர்திருத்த சிகாமணிகளே..
எழுத்தாளர்களே...
எழவு
வாயில் நுழையா
பெயர் கொண்ட
வஸ்தாதுகளே...

வாருங்கள்
வலது காலில்
பிணைக்கப்பட்டிருக்கும்
இப்பறவையின்
விலங்கை உடையுங்கள்..

வாழ வேண்டும்
நான்.......

No comments: