Thursday, December 27, 2007

கடலில் மிதக்கும் சருகு....


ஒலித்தடங்களினூடே
இழைந்து வருகிறாய் நீ
இசையின் புகைப்படமென....

உனது நகங்களின் ஸ்பரிசத்தால்
வழியும் குருதி குறித்த
யாதொரு பிரக்ஞையுமின்றி
ஸ்வாதீனமாய் இறங்குகிறாய்
என் இமைகளின் பிளவில்...

குளத்தளத்தின் வட்டலைகளின் மீதாக
அலைவுரும் மரத்துண்டென
என்னுள் பயணிக்கிறய் நீ...

உனது நிர்வானத்தின் முன்
உருமாறுகிறேன் நான்
புழுவென....

உனது முலைமுகடுகளில்
ஊறும் என்னை
எறும்பென நசுக்கி
தூர வீசுகிறாய்...

நா வறளும் என்முன்
விரிகிறாய் நீ
பெருங்கடலென....

இரவின் பிற்பொழுதில்
இச்சை தீர்ந்த காற்றென
ஓடிவிடுகிறாய்..

உன் நிராகரிப்பின்
நினைவு சின்னமாய்
வெளியே வழிகிறதென்
உயிர்.....

1 comment:

Anonymous said...

உனது நிர்வானத்தின் முன்
உருமாறுகிறேன் நான்
புழுவென
enna kaviyarasu
ithu
eppadi ippaidellam..
nalla karapanai